இரவு பகலறியாது,
உறவு பகை புரியாது,
அலை பேசியில்
கனிமொழி கதைத்தோம்..
உறவு பகை புரியாது,
அலை பேசியில்
கனிமொழி கதைத்தோம்..
அலப்பெருங் கதைகள்
ஆனந்தமாய் பகிர்ந்தோம்..
ஆனந்தமாய் பகிர்ந்தோம்..
மனதிற்குள் கண்ட
மணநாளும் நெருங்கிடவே
ஈருடல் ஒர் மனம் பெற்றோம்..
மணநாளும் நெருங்கிடவே
ஈருடல் ஒர் மனம் பெற்றோம்..
கதைகள் யாவும்
காலங்கள் மாற்றியது..
காலங்கள் மாற்றியது..
பேசிச் சிரித்த நாட்களைவிட
பேசாத மௌனங்களே நீடிக்க...
பேசாத மௌனங்களே நீடிக்க...
மொழியின்றி மௌனித்த அந்நாளும் கடந்திடுமோ..
பினியின்றிப் பாவித்த,
பொன்நாளும் தந்திடுமோ...
பொன்நாளும் தந்திடுமோ...
சர்கரையில் சருக்கிய
பலாச்சுலை போல
இனித்திடும் நன்நாளும் வாய்திடுமோ...
பலாச்சுலை போல
இனித்திடும் நன்நாளும் வாய்திடுமோ...
கனிந்த முக்கனியாய் நானும்,
கொறிக்கும் அனிலாய் நீயும்,
இதழ் சுவைத்து மகிழ்ந்திடும்
அந்நாளே இருவரின் பொன்நாளன்றோ...
கொறிக்கும் அனிலாய் நீயும்,
இதழ் சுவைத்து மகிழ்ந்திடும்
அந்நாளே இருவரின் பொன்நாளன்றோ...
No comments:
Post a Comment